மாநில வனத்துறையால் பரமாரிக்கப்படும் இந்த கம்பலகொண்டா பகுதி 1970ம் ஆண்டிலிருந்து ஒரு காட்டுயிர் சரணாலயமாக விளங்கி வருகிறது. இங்குள்ள கம்பலகொண்டா எனும் மலையின் பெயரிலேயே இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது.
71 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பசுமை மாறாக்காடுகளை இது உள்ளடக்கியுள்ளது. பலவிதமான தாவர வகைகள் மற்றும் உயிரினங்கள் இந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன.
அருகி வரும் உயிரினமான இந்தியச்சிறுத்தை மற்றும் குரைக்கும் மான், இந்திய குள்ளநரி போன்ற விலங்கினங்கள் ஆகியவற்றோடு கட்டுவிரியன், இந்திய நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இங்கு வசிக்கின்றன. ஆசியன் பாரடைஸ் ஃப்ளைகாட்சர் (ஈப்பிடிப்பான்) எனும் அரிய பறவையினமும் இங்கு காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications