விசாகப்பட்டணம் நகரத்தில் உள்ள ஒரு அழகான கடற்கரையாக இந்த ரிஷிகொண்டா பீச் புகழ் பெற்றுள்ளது. தங்கநிற மணற்பரப்போடு நீண்டு பரந்து காட்சியளிக்கும் இந்த கடற்கரை பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகிறது.
நீர்ச்சறுக்கு மற்றும் காற்றுச்சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் இந்த கடற்கரையில் ஈடுபடலாம். நீச்சலுக்கு ஏற்ற பாதுகாப்பான கடற்கரையாகவும் இது அமைந்துள்ளது. கடற்கரையை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் காணப்படுவதால் இந்த கடற்கரைப்பகுதி இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது.
காட்டேஜ் வசதிகள், ரெஸ்டாரெண்டுகள் மற்றும் பார் போன்றவை இந்த கடற்கரையில் காணப்படுகின்றன. இந்த வசதிகள் யாவும் விசாகப்பட்டணம் நகரத்தில் சுற்றுலாச்செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆந்திரப்பிரதேச சுற்றுலாத்துறையால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.