ராஸ் ஹில் என்றழைக்கப்படும் இந்த மலை கன்யாமரிகொண்டா என்ற பெயராலும் அறியப்படுகிறது. இது கிழக்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மிக உயரமான சிகரமாகும். வைசாக் நகரை சூழ்ந்து நிற்கும் மூன்று மலைகளிலும் மூன்று மதங்களை சேர்ந்த ஆன்மீக திருத்தலங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அதாவது, வெங்கடேஸ்வரா மலையில் ஒரு சிவன் கோயிலும், ராஸ் மலையில் வர்ஜின் மேரி தேவாலயமும் மற்றும் தர்க்கா கொண்டா மலையில் பாபா இஷாக் மதீனா எனும் இஸ்லாமிய யோகியின் கல்லறை மாடமும் அமைந்துள்ளன.
1864ம் ஆண்டு வாக்கில், ராஸ் என்ற ஆங்கிலேயரின் வீடு இம்மலையில் அமைந்திருந்ததால் இதற்கு ராஸ் மலை என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த வீடு பின்னாளில் ‘அவர் லேடி ஆஃப் தி சேக்ரெட் ஹேர்ட்’ என்ற தேவாலயமாகவும் மாறியுள்ளது.
இந்த தேவாலயத்துக்கு செல்லும் வழியில் பல கத்தோலிக்க சின்னங்களும் சித்தரிப்புகளும் காணப்படுகின்றன. இந்த மலையிலிருந்து ரம்மியமான இயற்கைக்காட்சிகள், கடற்கரைகள், துறைமுகம், கப்பல் கட்டுமானத்தளம் போன்றவற்றை நன்றாக பார்த்து ரசிக்கமுடியும் என்பதால் இது ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விசாகப்பட்டிணத்தில் பெயர் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications