கிருஷ்ணர் தனது இளம்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் விருந்தாவன் பகுதியில் அவர் கேஷி எனும் அசுரனை வதம் செய்த இடம்தான் இன்று கேசி காட் என்று பிரசித்தமாக அறியப்படுகிறது.
ஒரு ஆற்றுத்துறையான இந்த இடம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக யாத்ரீகர்களால் விஜயம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றுத்துறையில் ஏராளமான சிறு கோயில்கள் அமைந்துள்ளன.
விருந்தாவன் பகுதியின் புராதன ஆற்றுத்துறையாக விளங்கும் இந்த இடம் இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்தும் காட்சியளிப்பதால் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விரும்பப்படுகிறது.
இந்த துறையில் யமுனை ஆற்றில் மூழ்கி குளிப்பவர்களின் பாவங்கள் யாவும் தொலைந்து மோட்சம் கிட்டும் என்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. இங்கு நடத்தப்படும் தினசரி மாலைநேர பூஜை ஆராதனைகளில் யாத்ரீகப்பயணிகள் விருப்பத்துடன் கலந்துகொள்கின்றனர்.



Click it and Unblock the Notifications