சேர்வராயன் கோவில் கண்கவர் சேர்வராயன் மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
தேவி காவேரி ; நதியையும், சேர்வராயன் கடவுள்; இந்த சேர்வராயன் மலையையும் குறிக்கிறது. காவேரி தேவியும் சேர்வராயன் கடவுளும் சுற்றியுள்ள கிராமங்களை பாதுகாக்கும் கடவுள்களாக கருதப்படுகிறார்கள்.
இந்த கோயில் குகை மிகவும் ஆழமாக இருப்பதால் அது காவேரி ஆற்றை தொடுகிறது என்று நம்பப்படுகிறது. மே மாதத்தில் ஆண்டு விழாவை கொண்டாட கிராமத்தினர் இந்த கோவிலை சுற்றி கூடுவர்.
அழகிய மலைகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா வாசிகள் கண்கவர் அழகை இந்த அழகிய ஏற்காட்டில் அனுபவிக்கமுடியும். மலை உச்சியில் இருந்து கிடைக்ககூடிய இந்த காட்சி எந்த ஒரு பயணியின் சுற்றுலாவையும் தகுதியுடையதாக மாற்றும்.
மத பற்று உடையவர் அல்ல என்ற போதிலும் சுற்றுலா பயண திட்டத்தில் இந்த கோயிலை சேர்த்து கொள்ளவும். இந்த மலைகளின் பகட்டு மற்றும் பிரமாண்டம் அத்துடன் மலைகளின் மேல் இருந்து கிடைக்கும் அற்புத காட்சி நிச்சயமாக உங்களை பரவசத்தில் ஆழ்த்தும்.



Click it and Unblock the Notifications