துப்டி மடம் தான் சிக்கிமில் அமைந்துள்ள முதல் மற்றும் பழமையான மடம். 1701 ஆம் ஆண்டு கட்டபட்ட இந்த மடம் ந்யிங்மா செக்டை சேர்ந்த திபெத்திய மடமாகும்.
சோக்யல்களால் கட்டப்பட்ட இந்த மடம் புத்த மத புனித ஸ்தலங்களின் மண்டலத்தை சேர்ந்தது. மலை மீது அமைந்துள்ள இந்த மடத்திற்கு யூக்சோமிலிருந்து நடந்து செல்ல அரை மணி நேரம் எடுக்கும்.
இந்த மடத்தை அதன் நிறுவனர் லட்சுன் நம்கா ஜிக்மே அவர்களின் நினைவாக "ஹெர்மிட்டின் அறை" என்றும் அழைப்பர். இதனோடு சேர்த்து கட்டப்பட்ட மூன்று மடங்களும் இப்போது அழிந்துவிட்டது.
7000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மடம் அழகிய உள் அலங்காரங்களைக் கொண்டது. இந்த மடத்தின் சுவர்களில் கடவுள்கள் மற்றும் ஞானிகளின் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும்.
மேலும் இங்கே புத்தக தொகுப்புகள் மற்றும் கையெழுத்துப்படிகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மடம் நிறுவ காரணமாக இருந்த மூன்று லாமாகளின் சிலைகள் இந்த மடத்தில் உள்ளன. மொத்தத்தில் இந்த மடத்திற்கு சென்று வருவது ஒரு நல்ல அனுபவத்தை தருவது உறுதி.