வட சிக்கிம் மாவட்டத்தில் தற்பொழுது பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறிவரும் லாச்சென் பகுதி அமைதியின் இருப்பிடமாக அறியப்படுகிறது. லாச்சென் என்பதற்கு 'மிகப்பெரிய கணவாய்' என்று பொருள். இங்கு கண்ணுக்கினிய காட்சிகளும், அடர்ந்த காடுகளும் பயணம் செய்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையப்பெற்றுள்ளன.
காங்டாக்கில் இருந்து லாச்சென் 129 கிமீ தொலைவில், குருடோங்மர் ஏரியையும், சோப்தா பள்ளத்தாக்கையும் நோக்கி அமைந்திருக்கின்றது.
லாச்செனிலும் வட சிக்கிமை சார்ந்த மற்ற இடங்களிலும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சரியாக பின்பற்றுவதற்கென ”சும்ஸா” என்றழைக்கப்படும் பழைய நிர்வாக அமைப்பு பின்பற்றப்படுகின்றது.
இந்த சுய அரசாங்கதை தலைமை வகிக்கும் தலைவரின் பெயர் பிபான் ('Pipon'). அவர் பஞ்சாயத்திற்கு வரும் விவாதங்களை ஜனநாயக முறையில் தீர்த்து வைக்கின்றார். மேலும், ஒவ்வொரு வருடமும் லாச்செனில் ”தாங்கு” என்றழைக்கப்படும் எருது பந்தயம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
இங்கு சுமார் 1000 பேர் கொண்ட மிகக் குறைந்த அளவிலான மக்களே உள்ளனர். லாச்செனை பார்த்து மகிழ நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களின் இடையில் வரலாம். இந்த பருவத்தில் இங்கு வானிலை இனிமையாக இருக்கும்.