கோயம்புத்தூரில் உள்ள மருதமலை கோயில் இந்துக் கடவுள் முருகனுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. மலை உச்சியில் இந்தக் கோயில் அமைந்துள்ளதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருகக் கடவுளுக்கான கோயில்களில் அறுபடைவீடு ஆலயங்களிற்கு அடுத்த முக்கியத்துவத்தை இந்தக் கோயில் பெறுகிறது. முருக பக்தர்கள் மருதமலை முருகனின் ஏழாவது படைவீடு என்று நம்புகின்றனர்.
இந்தக் கோயில் புராதனமானது. பல வேத புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் திருமுருகன்பூண்டி ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் கூட மருதமலை கோயில் பற்றி குறிப்பிடுகின்றன.
இந்தக் கல்வெட்டுக் குறிப்புகளைக் காணும்போது மருதமலை கோயில் குறைந்தபட்சம் 1200 ஆண்டுகள் பழமையானது என்பதை ஒருவர் கணிக்க முடியும்.
முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.