1019யில் ராஜா ஜஸ் தேவால் நிர்மாணிக்கப்பட்ட ஜஸ்ரோடா பண்டைய காலத்தில் அதிகாரம் மிகுந்த பகுதியாக விளங்கியது. சிலகாலம் கழித்து இப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை தன் மாமன் ராஜா கரண் தேவ் வசம் வழங்கினார் மன்னர் ஜஸ் தேவ்.
1846ல் ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்த குலாப் சிங் என்னும் மன்னரால் இப்பகுதி மாவட்டமாக மாற்றப்பட்டது. ஜஸ்ரோடா பகுதியின் தலைவர்கள் ஜம்வால்கள் என்றும் ஜஸ்ரோடியாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
ஜஸ்ரோடா குன்றின் மேல் மகாகாளி கோவில் ஒன்று இருக்கிறது. சமீப காலங்களில் இந்த கோவில் மிக முக்கியமான புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாக மக்களால் கருதப்படுகிறது.