யெல்லோடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆதிநாராயணஸ்வாமி கோயில் யாத்ரீகர்கள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய ஆன்மீக ஸ்தலமாகும். பாகேபள்ளியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு குடைவறை (குகை) கோயிலாகும்.
இந்த கோயிலில் உத்பவமூர்த்தியின் சிலை ஆபரண அலங்காரங்கள் எதுவும் கொண்டிராது அமைந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு பூஜை ஒன்று இந்த கோயிலில் நடைபெறுகிறது.மக மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் கோலாகலமான தேர்த்திருவிழாவிற்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோயிலுக்கு செல்வதற்கு யாத்ரீகர்கள் 618 படிகளை ஏற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இவற்றில் கடைசி இரண்டு படிகள் மிக உயரமாக காணப்படுவதால் கயிற்றின் உதவியுடன் அந்த படிகளில் ஏற வேண்டியுள்ளது.