மலப்புரம் மாவட்டத்தில் பழமையான போர்த்துகீசிய குடியிருப்புகளுக்காக பிரபலமாக அறியப்படும் தானூர் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கேரளதேஷ்புரம் கோயில் அமைந்திருக்கிறது.
இந்தக் கோயில் மகாவிஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு 16-ஆம் நூற்றாண்டின் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் வந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
கேரளதேஷ்புரம் கோயில் மைசூர் மகாராஜா திப்பு சுல்தானால் தகர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இப்போது இருக்கும் கோயில் அதன் பிறகு புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும்.
இந்தக் கோயிலில் காணப்படும் சுவர்ச் சித்திரங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இங்கு மலையாள மாதம் விருச்சிகத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் ஆண்டுத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரள் திரளாக கலந்து கொள்வார்கள்.
கேரளதேஷ்புரம் கோயில் தானூர் நகருக்கு அருகில் அமைந்திருப்பதால் நீங்கள் இங்கு சுற்றுலா வரும் போது தானூர் கடற்கரையை தவற விட்டுவிடக் கூடாது.
அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு நேரம் இருந்தால் தானூர் நகருக்கு அருகில் உள்ள திருக்கைகட்டு கோயில் மற்றும் மடம், ஷோபா பரம்பு தேவி கோயில், வேட்டக்கொருமகன் கோயில் போன்ற இடங்களுக்கும் சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications