அல்வர் கோட்டை என்று பிரபலமாக அழைக்கப்படுகிற இந்த பலா குய்லா கோட்டையானது அல்வர் நகரத்திலுள்ள மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளது. இந்த கோட்டை ஹசன் கான் மெவாடி என்பவரால் 1550ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
இதன் கட்டுமான வேலைப்பாடு மற்றும் கம்பீரமான அழகியல் அம்சங்களுக்கு இது புகழ் பெற்று விளங்குகிறது. ஜெய்போல், லக்ஷ்மண் போல், சூரத் போல், சந்த் போல், அந்தேரி கேட் மற்றும் கிருஷ்ணா கேட் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆறு நுழைவாயில்கள் இந்த கோட்டையில் உள்ளன.
இந்த கோட்டையின் ஒட்டுமொத்த வளாகமும் வடக்கு தெற்காக 5கி.மீ நீளத்திலும், கிழக்கு மேற்காக 2கி.மீ அகலத்திலும் அமைந்துள்ளது. 15 பிரமாண்ட காவல் கொத்தளங்கள், 446 பீரங்கித்துவாரங்கள் மற்றும் 51 சிறு காவல் கோபுரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரமிப்பூட்டும் பாதுகாப்பு அம்சத்தை இந்த கோட்டை கொண்டுள்ளது.
இதன் கட்டிடக்கலை மற்றும் அழகியல் அம்சங்களுக்காக இது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகுந்த பிரசித்தமானதாக அறியப்படுகிறது. முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டை பின்னாளில் கச்சாவாஹ ராஜபுத்திரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.