மாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.
மாங்கல்யா வான் என்பது ஒரு தனித்தன்மை வாயந்து ஜோதிட தோட்டம் ஆகும். இங்குள்ள தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று தாவரங்கள் உள்ளன. ஜோதிடர்கள், அதிர்ஷ்டக் கற்கள் தருகின்றன அதே பலனை இந்த தாவரங்கள் கொடுப்பதாக கூறுகின்றனர்.
ஜோதிட தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்தத் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களில் சிலர் அவர்களுக்கு தேவைப்படும் ஜோதிட தாவரங்களின் கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர்.
ஒருவருடைய ராசிக்கான மரத்தை ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.