அம்ராவதியை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீராதாரமாக இந்த சத்ரி தலாவ் நீர்த்தேக்கம் பயன்படுகிறது. மால்கேட் சாலையில் உள்ள தஸ்தூர்நகர் சதுக்கத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் அமைந்துள்ள காளி நதி எனும் சிற்றாற்றில் 1888ம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்சமயம் நகரத்தின் குடிநீர்த்தேவைகள் ‘மேல் வார்தா அணை’ நீர்த்தேக்கத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன. சத்ரி தலாவ் ஸ்தலத்தில் உள்ள ஒரு சிறு பூங்கா மற்றும் படகுச்சவாரி போன்ற அம்சங்களுக்காக பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர்.