சுமார் 326.24 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் போரைல் வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமின் மிகப்பெரிய சரணாலயங்களுள் ஒன்றாக, ஈரப்பதம் நிரம்பிய பசுமை மாறா மண்டலக் காடுகள் மற்றும் பகுதியளவில் பசுமை மாறாமலிருக்கும் காடுகளைக் கொண்டு புகழ் பெற்று விளங்குகின்றன.
இங்கு, சீன எறும்புதின்னி, பறக்கும் நரி, மெதுவாகச் செல்லும் பாலுண்ணி பிராணி, கட்டையான வாலை உடைய குரங்கு, ரீசஸ் குரங்கு, தொப்பித்தலை குரங்கு, ஹூலாக் குரங்கு மற்றும் இமாலய கருங்கரடி போன்ற பலவகை பாலூட்டிகளைக் காணும் வாய்ப்பைப் பெறலாம்.
மேலும், வெள்ளை பின்புறத்தை உடைய ராஜாளி, ஒல்லியான அலகுடைய ராஜாளி, வெள்ளை கன்னங்களையுடைய மலை கௌதாரி, மலை மூங்கில் கௌதாரி போன்ற பறவைகளையும், மலைப்பாம்பு, ராஜநாகம், பழுப்பு நிற மலை ஆமைகள், ஆசிய இலை ஆமை மற்றும் ராட்சத பல்லி போன்ற ஊர்வன இனத்தைச் சேர்ந்த பிராணிகளையும் கூட இங்கு காணலாம்.
இந்த சரணாலயத்துக்குச் செல்ல வேண்டுமெனில், சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சில்சார் (கும்பிர்கிராம்) விமான நிலையத்துக்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்கலாம்.
சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிம்கனி நகரிலிருந்து சாலை வழியாகவும் இந்த சரணாலயத்தை அடையலாம். இந்த சரணாலயத்திற்குச் செல்ல உகந்த காலம் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஆகும்.