ஔரங்காபாத் நகரில் மற்றொரு சுவாரசியமான இடம் இந்த கில்லா அரக் அரண்மனை ஆகும். இந்த அரண்மனை ஔரங்கசீப் மன்னர் காலத்தில் அவரது ஆணைப்படி கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. தற்சமயம் இடிபாடடைந்து காணப்படும் இந்த அரண்மனையில் புகழ் வரலாற்றுக் காலத்தில் டில்லியிலிருந்து மெக்கா வரையில் பரவி இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.கில்லா அரக் அரண்மனை நான்கு வாயில்களை கொண்டுள்ளது. அரண்மனையின் மற்ற பகுதிகள் சிதைந்து விட்டதால் ஔரங்கசீப்பின் கம்பீரமான அரியணை அறை மட்டுமே அரண்மனை தோட்டத்தின் அருகில் காணப்படுகிறது.
இங்குள்ள மஸ்ஜித்தை ஒட்டி ஒரு வித்தைகளுக்கான சிறு மைதானமும் உள்ளது. இந்த மைதானத்தின் வாசலுக்கருகில் உள்ள கல்வெட்டில் 1659 வருடத்தை குறிப்பிடும்படியாக சில குறிப்புகள் உள்ளன.



Click it and Unblock the Notifications