சுன்ஹேரி மஹால் என்ற பெயர் இந்த அரண்மனை தங்கத்தால் வரையப்பட்டிருந்த ஓவியங்களை கொண்டிருந்த தால் ஏற்பட்டது. இந்த அரண்மனை தக்காணத்தில் ஔரங்கசீப் ஆளுகை செலுத்த உதவியாக இருந்த தளபதி பந்தல்கண்ட் என்பவரால கட்டப் பட்டதாகும்.ஔரங்காபாத் நகரத்துக்கு வெளியில் பஹர்சிங்புரா எனும் இட்த்தில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இதன் கட்டமைப்பு கற்கள் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த மஹாலில் ஒரு உயரமான மேடை ஒன்று இருந்தது. அது தற்சமயம் சிதிலமடைந்து காணப்படுகிறது.இந்த மஹாலை பார்ப்பதற்கு இந்தியர்களுக்கு பத்து ரூபாயும் வெளி நாட்டவர்க்கு நூறு ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இந்த மஹால் திறக்கப்படுகிறது.