பூதநாத கோயில் தொகுப்பில் உள்ள இரண்டு முக்கியமான கோயில்களில் ஒன்று இந்த பூதநாத கோயிலாகும். மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் சிவபக்தர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
இங்கு சிவனின் அவதாரமான பூதநாதர் குடிகொண்டுள்ளார். இந்த கோயிலின் திறந்த மண்டபம் ஏரி வரை நீண்டு காணப்படுகிறது. இது துவக்க கால தென்னிந்திய திராவிடக்கலை மரபையும் வட இந்திய நகரா மரபையும் பிரதிபலிக்கின்றது.
இந்தக்கோயிலின் மையக்கருவறையும் மண்டபமும் பாதாமி சாளுக்கியர்களால் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தடாகம் வரை வெளிமண்டபம் கல்யாணச் சாளுக்கிய மன்னர்களால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் பின்பகுதியில் ஜைன சிற்பங்களும், விஷ்ணு அவதாரச் சிற்பங்களும் பாறைகளில் செதுக்கப்பட்டு காணப்படுகின்றன. அகஸ்திய ஏரியின் கிழக்குப்பகுதியில் ஒரு சிறு குன்றின்மீது உள்ள இந்த கோயில் ஆதியில் 5ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
அருகாமையில் அமைந்துள்ள கோட்டைக்கு எதிரில் இந்த கோயில் உள்ளது.