நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராஜேந்திர பார்க் ஆனது, பட்நகரின் கடைசி மன்னரான ஹச் ஹச் ராஜேந்திர நாராயண் சிங் தியோ என்பவரால் கட்டப்பட்டது. இந்த பூங்காவானது பாலங்கர் நகரத்தின் மையத்தில் உள்ளது.
இந்தப் பூங்காவில் ரோஜாக்கள் மற்றும் மற்ற மலர் இனங்களைச் சார்ந்த பல நூறு வகைகள் உள்ளன. மாலை வேளையில் இந்தப் பூங்காவானது அலங்கார விளக்குகள் மற்றும் நீரூற்றுகளால் புத்துயிர் பெறுகின்றது.
மேலும் இந்தப் பூங்காவில் மாலை வேளையில் பழைய ஹிந்தி பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்தப் பூங்காவில் இசை ஒலிபரப்பிற்காக டால்பி டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் மத்தியில் ஹச் ஹச் ராஜேந்திர நாராயண் சிங் தியோவின் சிலை ஒன்று உள்ளது.
இந்தப் பூங்கா மிக சமீபத்தில் பலிங்கர் நகராட்சி வாரியம் மூலம் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பூங்காவில், சிறுவர் விளையாட்டு மைதானம், பல்வேறு கேளிக்கை வசதிகள் மற்றும் உணவு விடுதி ஒன்றும் உள்ளது. இந்தப் பூங்கா மாலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.