பாந்தவ்கார் அருங்காட்சியகம் இந்த இடத்தின் வரலாற்று சிறப்புக்கு சான்றாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் ரீவா மஹாராஜாக்களின் சொத்துக்களை பாதுகாட்டு காட்சிப்படுத்துகிறது.
பாந்தவ்காரில் உள்ள பக்ஹெல் அருங்காட்சியகம் ஒரு அரச மாளிகை ஆகும். இங்கு ரீவா அரசர்களின் உடமைகள் மற்றும் பிற பொருட்கள் காட்சிக்கு அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகம் ரீவா அரசர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய பழங்கால ஆயுதங்களை பாதுகாத்து வருகிறது. இங்கு மோகன் என்று அழைக்கப்படும் முதல் வெள்ளை புலியின் பஞ்சு அடைத்த உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்கு பயணிகள் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஸிகர்கர்க்கின் சொத்துகள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காட்டு வாழ்க்கையை தவிர்த்து அரச வாழ்க்கையையும் தெரிந்து கொள்ளலாம். இந்த இடத்தை பார்ப்பதற்கு நவம்பர் முதல் ஜூன் வரையிலான காலமே சிறந்தது.



Click it and Unblock the Notifications