சேஷ் செய்யாவில் விஷ்ணுவின் 65 அடி உயரச் சிலை உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் `சாரன்கங்கா' நதி ஆரம்பிக்கிறது. சேஷ் செய்யா பாந்தவ்கார் ஹில்லில் அமைந்துள்ளது.
மேலும் பாந்தவ்கார் தேசிய பூங்காவில் உள்ள இடங்களில் காலால் நடந்தே செல்லக் கூடிய இடம் இது மட்டுமே. இதன் பெயர் குறிப்பிடுவது போல் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்ட விஷ்ணுவின் சிலை இங்குள்ளது.
இந்த சிலையின் வடிவமைப்பு மிகவும் புராதனமானது. சேஷ் செய்யாவின் சிலை ஒரு பச்சை குளத்தின் நடுவே உள்ளது. இந்த பச்சைக் குளத்தில் இருந்து சாரன்கங்கா நதி உற்பத்தியாகிறது என சொல்லப்படுகிறது.
இந்து மத நம்பிக்கையின் படி சாரன்கங்கா நதி விஷ்ணுவின் பாதத்தில் இருந்து உற்பத்தியாவதாக நம்பப்படுகிறது. எனவே இந்த நதி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
இந்த குளத்தின் கரையில் ஏராளமான பழம் தரும் மரங்கள் உள்ளதால் மலபார் பைய்ட் ஹார்ன்பில் போன்ற பறவைகள் வருகை தருகின்றன. புனிதத்தளமான இந்த இடத்திற்கு ஏராளமான பயணிகள் தீபாவளி பண்டிகையின் பொழுது வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications