பாராபங்கி நகரத்தில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றான இந்த மஹாதேவா கோயில் ஒரு அபூர்வமான சிவலிங்கத்தை கொண்டுள்ளது. தீவிர சிவபக்தர்கள் விரும்பி இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.
தலபுராணக்கதைகளின்படி ஒரு எளிய பிராம்மண வேதியரான லோதேராம் அவஸ்தி என்பவர் தனது வயலில் இந்த சிவனின் சிலையை கண்டுபிடித்து இந்த கோயிலை எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
மஹாபாரத காவியத்தின் பல இடங்களில் இந்த கோயில் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. மஹாசிவராத்திரி தினத்தில் இந்த கோயில் அலங்கரிக்கப்பட்டு ராப்பூஜை நடத்தப்படுகிறது.