பரமுல்லா மாவட்டத்தின் இன்னொரு நகரான பன்டிபோர், உலர் ஏரியன் துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் உலர் ஏரியின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது.
இந்த நகரில் அமைந்திருக்கும் பூங்கா, ஜம்மு காஷ்மீரை சேரந்த முகலாய அரசர்களின் பிரசித்தி பெற்ற பூங்காவான நிஷாத் பாக்கை ஒத்திருக்கும். இந்த பூங்காவிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த பன்டிபூர் நகரம், பனிச்சறுக்கு, மீன் பிடித்தல் மற்றும் மலையேற்றம் போன்றவற்றிற்கு பிரசித்தி பெற்றது. மலையேற்றத்தில் ஆர்வமுள்ள பயணிகள், பன்டிபூரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹார்முக் மலையைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
மேலும் அவர்கள் இந்த மலையில் அவர்கள் கூடாரம் இட்டு இங்கு இனிமையாக பொழுதைக் கழிக்கலாம். மேலும் மீன்களின் இல்லமாக அரின் நல்லா என்ற பகுதியும் இங்கு அமைந்துள்ளது. இங்கு எல்லா வகையான மீன்களும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications