பங்கேஸ்வரி கோவில் பிரபலமடைவதற்கு முன்பே இங்கு பல பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். பெஹ்ராம்பூரில் இருந்து 20கிமீ தொலைவில் கெரண்டிமாலா மலைத்தொடரில் உள்ள இக்கோவிலை பெஹ்ராம்பூர்- திகபண்டி நெடுஞ்சாலையில் இருந்து 10கிமீ பயணத்தின் மூலம் அடையலாம்.
சக்தியின் வடிவமாக கருதப்படும் பங்கேஸ்வரி அம்மனின் சிலை சிகப்பு நிற உடை உடுத்தி கோபமாக காட்சியளிக்கிறது . கோடை காலம் இங்கு செல்வதற்கு உகந்த பருவமாகும், இந்துக்களுக்கு புனித தளமாக விளங்கும் இந்த இடத்தின் இயற்கை அழகும், அமைதியும் வர்ணிக்க முடியாதது.