ஷத்ருனாய் மற்றும் தாளாஜி ஆறுகள் ஓடும் மலை உச்சியில் அமைந்திருக்கும் நகரம் தளாஜி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மலைகளைக் குடைந்து பௌத்த மடாலயங்கள் அமைத்திருக்கின்றனர். மலையில் அமைந்திருக்கும் கோவில்களையும் மடாலயங்களையும் காண சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வருகின்றனர்.