பவாகத் என்ற மலை சம்பனேருக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த மலையில் தான் புகழ் பெற்ற மஹாகாளி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. மஹ்முட் பேக்டா சம்பனேரை கையகப்படுத்தி இதனை புகழ் பெறச் செய்வதற்கு முன்பாகவே இந்த கோவில் இருந்துள்ளது.
சம்பனேர் அழிந்த போது கூட இந்த கோவில் நிலைத்து நின்றது. இந்தக் கோவிலுக்கு பழங்காலத்தில் இருந்து இன்று வரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலுக்கு மலை பாதையில் நடந்தோ அல்லது கயிற்றுப்பாதை வழியாகவோ வந்தடையலாம். இந்த கோவிலின் கர்ப்பகிரஹத்தில் மாதா காளிகாவின் சிவப்பு நிற முகம் மட்டும் தான் இருக்கும்; உடம்பு இருக்காது.
மாதா மற்றும் பஹுசாராவை சேர்ந்த யாந்த்ராகளின் முழு உருவச்சிலைகளையும் இங்கே காணலாம். இந்த கோவிலில் அதிகமான நேரம் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு தோதான நேரத்தில் இங்கு தரிசனம் பெற வரலாம்.
சோலங்கி ராஜ்புட்களால் பவாகத்தில் ஒரு கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. இன்னமும் கூட இந்த கோட்டையின் சுவர்கள் எஞ்சியிருக்கிறது.
இந்த கோட்டையினுள் 10-11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ஹிந்துக் கோவில் தான் ஹிந்துக்களின் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோட்டையினுள் நகரா வடிவமைப்பில், 13-15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேறு சில ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களும் கூட உள்ள