கடல் மட்டத்திற்கு மேலே 4500 அடி உயரத்தில் உள்ள பீம்தால் ஏரி, நைனிடாலை சுற்றியுள்ள மிக பெரிய இயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இது பாண்டவர்களில் ஒருவனான பீமனின் பெயரால் அழைக்கப்படுகின்றது.
இந்த ஏரி, நைனிடாலில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் சிறிய துடுப்பு படகுகள், மற்றும் படகுகள் உள்ளன. எனவே, சுற்றுலா பயணிகள் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம்.
இந்த ஏரி, பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்கு ஒரு இயற்கையான இருப்பிடமாக விளங்குவதால், இமயத்தை தாண்டி இடம் பெயறும் பல்வேறு பறவைகளான கருப்பு கழுகுகள்(black eagle), சுவர் கொடி பறவைகள்(wall creeper birds), பழுப்பு மீன் ஆந்தைகள்(tawny fish owls), சின்னான்(bulbuls), மற்றும் மரகத புறாக்கள்(emerald doves) ஆகியவற்றை தன்னுள் ஈர்கிறது.
கரையில் இருந்து 91 மீ தூரத்தில், ஏரியின் மையத்தில் ஒரு பெரிய தீவு உள்ளது. சுற்றுலா பயணிகள் படகு மூலம் தீவை அடைந்து, அங்குள்ள அக்வேரியத்தில் சீனா, மெக்ஸிக்கோ, மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பல அரிய மற்றும் அற்புதமான மீன்களை கண்டு களிக்கலாம். இந்த ஏரியை சுற்றி குமானி மலைகள் உள்ளன.