ஏகாம்ர காணன் எனும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரின் மற்றொரு அழகுப்பூங்காவாகும். இது நய்யப்பள்ளி பகுதியில் சாஹீத் நகர் எனும் இடத்தில் உள்ளது. பிரம்மாண்டமான 512 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்திருக்கிறது.
இந்த பூங்கா வளாகத்தில் ஒரு அழகிய ஏரி, ஒரு ரோஜாத்தோட்டம், மலர்ச்செடி பண்ணை போன்றவை இடம் பெற்றுள்ளன. இது போன்ற பல சிறப்பம்சங்களால் இது சுற்றுலாப்பயணிகள் தவறாமல் விஜயம் செய்யும் இடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
இங்குள்ள ஏரியில் பயணிகள் படகுச்சவாரி செய்வதற்கும் வசதிகள் உள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற மைதானங்களும் இங்கு காணப்படுகின்றன. பிரமிடு வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ‘கிரீன்ஹவுஸ்’ அமைப்பு இந்த பூங்காவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
ஏகாம்ர காணன் பூங்கா வளாகத்தை ஒட்டியே ஏகாம்ர ஹாட் எனும் மார்க்கெட் பகுதி அமைந்திருக்கிறது. இங்கு பல்வேறு கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துணிவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் ஞாபகார்த்த பொருட்கள் வாங்குவதற்கு இது மிகவும் ஏற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications