ஐ.ஜி பார்க் அல்லது இந்திரா காந்தி பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரில் உள்ள மற்றும் ஒரு அழகுப்பூங்காவாகும். இது பிரம்மாண்டமான 10.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
புபனேஷ்வர் நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக திகழும் இது ஏ.ஜி ஸ்கொயர் எனும் இடத்தில் உள்ளது. இதன் பின்னணியில் ஒடிஷா மாநில அரசின் தலைமைச்செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன.
முன்னதாக இந்த பூங்கா ஸ்தலமானது அணிவகுப்பு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் அழகிய பூங்காவாக மாற்றப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு திறந்துவிடப்பட்டது.
ஒரு வரலாற்று பின்னணியும் இதற்கு உண்டு. அதாவது, மறைந்த பாரதப்பிரதமர் திருமதி இந்திரா அம்மையார் தனது கடைசி பொதுக்கூட்ட உரையை 1984ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி இந்த பூங்காவில்தான் நிகழ்த்தியுள்ளார்.
பூங்காவின் உள்ளே அவரது சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூங்காவிற்கு பயணிகள் எப்போது வேண்டுமானாலும் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications