விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் திரியுக் நாராயண் ஆலயம் புண்டர் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாகும். இந்த ஆலயம் புண்டருக்கு 12 கிமீ தொலைவில், டயர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
கிபி 800ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் பகோடா கட்டிடக் கலையின் சிறப்பை உலகிற்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் 4 அடி உயரமுள்ள விஷ்ணுவின் சிலை வேண்டும் வரத்தை கொடுப்பதாக பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது. இதுதவிர இந்த ஆலயத்தில் மிகச் சிறிய புத்தர் சிலைகள் சிலவும் காணப்படுகின்றன.
இந்த ஆலயங்களைத் தவிர்த்து பிஜ்லி மகாதேவ் ஆலயம், காசிதார் ஜமுலா ஆலயம், சந்திராகனி பாஸ் ஆலயம் மற்றும் கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் போன்றவையும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய இடங்கள் ஆகும்.