புத்தர் ஞானம் பெற்றதாக கருதப்படும் இடத்தில் இந்த மஹோபோதி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு மேற்கே பிரசித்தமான போதி மரம் வீற்றிருக்கிறது. திராவிடகோயிற்கலை மரபுப்படி அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் அசோகச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும் இந்த புராதனமான புத்தர் கோயில் அதன் ஆதி வடிவத்தில் எந்த சேதமும் ஏற்படாமல் வீற்றிருக்கிறது. இந்த கோயிலின் மையக்கோபுரம் 55 மீட்டர் உயரத்தில் காட்சியளிக்கிறது.
19ம் நூற்றாண்டில் சில புதுப்பிப்புகளும் இதில் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மைய கோபுரத்தை சுற்றிலும் இதே போன்று நான்கு சிறிய கோபுரங்களும் அமைந்துள்ளன.
இரண்டு மீட்டர் உயரத்தில் பாறைக்கற்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் அமைப்பும் இந்த கோயிலை சுற்றி காணப்படுகிறது. இந்த சுவர் அமைப்பின் சில இடங்களில் தாமரை சிற்ப வடிப்பும், சூரியன், லட்சுமி போன்ற ஹிந்து கடவுள்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.