போர்டி கிராமத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டை ஆற்றின் வடகரையில் உயரமாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது. கருங்கற்களால் எழுப்பப்பட்டுள்ள இந்தக்கோட்டையின் சுவர் 10 அடி அகலமும் 38 அடி உயரமும் கொண்டுள்ளது.
சிம்மாஜி ராவ் அப்பா எனும் மன்னரின் தலைமையில் மராத்தா வம்சத்தினர் 1739ம் ஆண்டு ஜனவரியில் கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் 1817ம் ஆண்டு பசைன் உடன்படிக்கையின்படி இந்த கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்து சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்றும் நல்ல நிலையில் காணப்படும் இந்த கோட்டை கட்டிடக்கலை மற்று வரலாற்று ஆர்வலர்களை பெரிதும் கவர்கிறது. இருப்பினும் இந்த கோட்டையில் கூரைத்தளம்1818ம் ஆண்டில் சேதமடைந்து விட்டது என்பதுகுறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
போர்டி பகுதிக்கு வருகை தரும் பயணிகல் யாவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய வரலாற்று நினைவுச்சின்னமாக இந்த தஹானு கோட்டை விளங்குகிறது.



Click it and Unblock the Notifications