சுத் ஹரன் புத்காம் மாவட்டத்தில் உள்ள டோஸாமெய்டனில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பிரபலமான நீருற்று ஆகும். அடர்த்தியான காடுகளின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஏரியானது சொல்லப்போனால் இந்திய மற்றும் சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் அமைந்துள்ளது.
இந்து மத இதிகாசங்களின் படி, ஹிந்துக்களின் பாதுகாப்பு அவதாரமான ராமன் நாட்டை விட்டு வெளியேறிய போது தனது மனைவி சீதா தேவி மற்றும் தனது சகோதரர் லச்சுமனனுடன் இந்த காட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் இங்கு தங்கியிருந்த காலத்தில் சீதா இந்த நீருற்றில் குளித்ததாகவும் நம்பப்படுகிறது. எனவே தான் இந்த நீருற்று முதலில் சீதா ஹரன் என்று பெயர் பெற்றிருந்தது. அதன் பிறகு இந்த நீருற்றின் பெயர் சுத் ஹரன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நீர் நிலையின் அருகில் உள்ள ஒரு பாறை மீது சீதா அமர்ந்து இருந்ததாகவும் நம்பப்படுகிறது. இந்த நீருற்று நீரின் சுவை மிகவும் இனிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications