ஷாம் தேத் கல்லறை புத்காம் மாவட்டத்தில் போஷ்கார் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஷாம் தேத் புதைக்கப்பட்ட இடமாகும். ஒரு கொல்லனின் மகளான இவர் ஹஸ்ரத் ஷேக் நூர்-உத் தின் நூரானி (ரலி) மற்றும் ஷேக் உல் ஆலமிடம் இருந்து ஆன்மீக டிப்பினைகளை கற்று தேர்ந்தார்.
ஷாம் தேத் தனது பெயரினை ஹஸ்ரத் ஷேக் நூர்-உத் தின் நூரானியின் சீடர் பாபா லத்தீஃப்-உத் தின் குவாஸி என்பவரிடம் இருந்து தனது பெயரை பெற்றார்.
ஷேக் நூர்-உத் தின் நூரானி இறந்த தகவலை பாபா லத்தீஃப்-உத் தின் இடம் அனுப்ப காரணமான ஒருவர் ஷாம் தேத் என்று நம்பப்படுகிறது. இவர் அந்த தகவலை அனுப்பியபோது அது மாலை நேரம். இதன் காரணமாக, மாலை நேரம் என்று பொருள் படும் அதாவது 'ஷாம்' என அவருக்கு பெயரிடப்பட்டது.



Click it and Unblock the Notifications