பூந்தி நகரத்திலிருந்து 48 கி.மீ தூரத்தில் சித்தோர்கர் சாலையில் இந்த பிஜோலியா என்னும் இடம் அமைந்துள்ளது. இது சௌஹான் மன்னர்களின் ஆட்சியில் கலை மற்றும் கட்டிடக்கலைக்கான கேந்திரமாக திகழ்ந்துள்ளது. ஒரு சமவெளிப்பகுதியை கடந்து நகரை அடையும் வகையில் இந்த பிஜோலியா நகரின் புவியியல் அம்சம் அமைந்துள்ளது.
சௌஹான் மன்னர்களின் ஆட்சியில் கட்டப்பட்ட மூன்று கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. 13ம் நூற்றாண்டில் சிவ பெருமானுக்காக இந்தக்கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் ஒரு அமைதியான குளம் ஒன்றும் காணப்படுகிறது.