மாயாவதி ஆஷ்ரமை அத்வைத்த ஆஷ்ரம் என்றும் அழைப்பர். இது சம்பவத்திலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்தின் மேல் 1940 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த ஆஷ்ரமத்திற்கு இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.
1898-ல் சுவாமி விவேகானந்தா மூன்றாவது முறையாக அல்மோரா வந்த போது தமது "பிரபுத்த பாரத்" என்ற வெளியீட்டு நிறுவனத்தை சென்னையில் இருந்து மாயாவதிக்கு மாற்ற முடிவு செய்தார்.
அதிலிருந்து இந்த மாத வெளியீடு இந்த இடத்திலிருந்தே வெளியானது. ஒரு சின்ன அருங்காட்சியமும் நூலகமும் இந்த ஆஷ்ரமத்தில் உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.



Click it and Unblock the Notifications