அஷ்ட லட்சுமி கோயில் எனப்படும் இந்த பிரசித்தமான கோயில் பெசண்ட் நகர் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளது. செல்வத்துக்கும் செழிப்புக்கும் ஆன கடவுளாக பூஜிக்கப்படும் லட்சுமி தேவியின் எட்டு அவதார கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.
விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் இந்த லட்சுமி அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமான ஐதீகமாக பக்தர்களால கருதப்படுகிறது.
கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்த கோயில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது தொகுதியில் உள்ள மஹாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவை வணங்கியபின்னர் மற்ற தெய்வ வடிவங்களை வணங்கவேண்டும் என்ற ஐதீக விதி இங்கு பின்பற்றப்படுகிறது.
மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமி தெய்வங்கள் வீற்றுள்ளன. நான்காவது தளத்தில் தனலட்சுமி மட்டுமே வீற்றுள்ளார். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி தெய்வங்கள் வீற்றுள்ளன.



Click it and Unblock the Notifications