இந்தியாவின் ஏழாவது உயரமான நீர்வீழ்ச்சியான கைன்ரெம் நீர்வீழ்ச்சி, சோஹ்ராவின் மலைகளில் இருந்து மூன்று படிநிலைகளில் கீழ்நோக்கிப் பாய்கிறது. அருகருகாக பாயும் இதர சிறு அருவிகளை அருகாமையில் கொண்டுள்ள கைன்ரெம் நீர்வீழ்ச்சி, மழைக்காலத்தின் போது காணத் தெவிட்டாத ஒரு காட்சியாகும்.
இந்த கம்பீரமான நீர்வீழ்ச்சியைக் கண்ணாறக் காண்பதற்கான உகந்த இடம் தங்க்கரங் பூங்காவின் உட்பகுதியே ஆகும். எனினும், சிரபுஞ்சியை வங்கதேசத்துடன் இணைக்கும் சாலையிலிருந்து பார்த்தால் இந்த நீர்வீழ்ச்சியை அதன் அடிப்புறத்திலிருந்து காணலாம்.
சிரபுஞ்சி, அது ஒவ்வொரு வருடமும் பெறும் அதீத மழைப்பொழிவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. அதனால் இங்குள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகள் இந்த மழைகளிலிருந்தே தமக்கான நீர் வரத்தைப் பெறுகின்றன.
எனவே, கைன்ரெம் நீர்வீழ்ச்சி செல்வதற்கான மிகச் சிறந்த காலம், அடைமழை பொழியும் காலமே ஆகும்; ஏனெனில் குளிர்காலத்தின் போது நீர்வீழ்ச்சிகள் சிறு தாரையாக வறண்டு போய் காணப்படும்.
தங்க்கரங் பூங்கவையோ அல்லது நேரிடையாக கைன்ரெம் பூங்காவையோ அடைய வேண்டுமெனில், மேகாலயா சுற்றுலாத் துறையினால் ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் சுற்றுலா கார் அல்லது பேருந்தில் பதிவு செய்து செல்லலாம்.