சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். ஒவ்வொரு வருடமும் பெய்யும் அபரிமிதமான மழைப்பொழிவுக்கு பெயர் போன சிரபுஞ்சியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, முக்கியமாக இந்த மழைகளிலிருந்தே அதன் நீர் வரத்தைப் பெறுகிறது.
எனவே, டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது, இதுவும் குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். மிகச் சரியாக இந்த நீர்வீழ்ச்சியின் கீழ்ப்புறத்தில், நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பாரித்த நீர் நிறைந்த அழகிய முங்கு குளம் ஒன்று உருவாகியுள்ளது.
நோகலிகை நீர்வீழ்ச்சிக்கு, கா லிகாய் என்ற பெயருடன் வாழ்ந்து, இந்த நீர்வீழ்ச்சிக்கு அடுத்தாற் போல் உள்ள செங்குத்தான மலையிலிருந்து கீழே விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய உள்ளூர் புராணத்திலிருந்தே இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்பெல்லாம், இதிலிருந்து சற்று தொலைவில் உள்ள நோக்குமுனையிலிருந்து மட்டுமே பார்க்க்க்கூடியதாக இருந்தது நோகலிகை நீர்வீழ்ச்சி. ஆனால், சமீபத்தில் கட்டப்பட்ட படிகள் அதன் அடிப்புறத்திற்கு உங்களை அழைத்துச் சென்று இந்த நீர்வீழ்ச்சியை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.
கழுத்து வலி, ஆஸ்துமா போன்ற நோய்களினால் அவதிப்படுவோர் இறங்கி வர வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகின்றனர்; ஏனெனில், பல நூறு படிகளில் இறங்கி வருவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.
இப்பகுதியை சுற்றிலும் காணப்படும் ஏராளமான உணவு விடுதிகள் மற்றும் உணவுச் சாலைகளில் உள்ளூர் காஸி உணவு வகைகளிலிருந்து வடக்கு மற்றும் தெற்கு இந்திய உணவு வகைள் வரையிலான பல்வேறு உணவு பதார்த்தங்களும் கிடைக்கின்றன.
ஏன், சீன நூடுல்ஸ் கூட கிடைக்கிறது. இப்பகுதியின் உள்ளூர் கைவினைப் பொருட்களை வாங்கக்கூடிய வகையில் ஏராளமான சிறு கடைகளும் இங்கு காணப்படுகின்றன.