கோஸானிமரி ராஜ்பாத் எனப்படும் இந்த ஸ்தலம் கூச் பிஹார் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான அகழ்வாராய்ச்சி ஸ்தலமாகும். இங்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வெகு காலமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு கிடைத்திருக்கும் சான்றுகள் இப்பகுதியில் புராதன பௌத்த நாகரிகம் செழிப்பாக இருந்ததை குறிப்பிடுகின்றன. பல்வேறு கல்வெட்டுக்குறிப்புகள், நகர அமைப்பின் சிதிலங்கள், கிணறுகள், நீர்க்கால்வாய்கள் போன்றவை இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பரந்த புல்வெளி வளாகமாக காட்சியளிக்கும் இந்த இடத்தில் ஒரு மாலை நேரத்தை கழிப்பது ரசிக்கக்கூடிய அனுபவமாக இருக்கும். சிதிலமடையாமல் மெருகுடன் காட்சியளிக்கும் புராதன சின்னங்கள் வரலாற்று ஆர்வலர்களை நிச்சயம் கவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.