சிதம்பரம் நகரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ள இடம் புகழ் பெற்ற பிச்சாவரம் ஏரியாகும். மாங்குரோவ் காடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த ஏரி உலகிலேயே மிகப்பெரிய சதுப்பு நிலப்பகுதி என்பதை நம்ப முடிகிறதா! இந்த மாங்குரோவ் காடுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் பல்வேறு தீவுகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக இருக்கின்றன.
வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில பறவை வகைகளாகும். செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன.
இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும். இந்த ஏரிகளை காலையில் சூரிய உதயத்தின் போது காண வருவது கண்களுக்கு மிகவும் விருந்தளிக்கும் காட்சியாக இருக்கும்.