முதன்மையான சுற்றுலாதலமாக விளங்கும் பார்மர், சம்பாவில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின், கட்டி (Gaddi) வகை பழங்குடியினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பகுதி ஒரு காலத்தில் சம்பாவின் தலைநகரமாகவும் இருந்த பெருமைக்குரியது.
பயணிகள் இந்த இடத்திலிருந்துவாறே சுற்றுவட்டத்தில் அதன் மலைகள், கோவில்கள் மற்றும் இயற்கையழகையும் ரசித்திட முடியும். இந்த இடம் அதன் புத்தணர்ச்சிமிக்க பழங்கள் மற்றும் போர்வைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்களை கொண்டிருப்பது இந்த இடத்தை நோக்கி சுற்றுலாபயணிகள் வருவதை மிகவும் ஊக்குவிக்கிறது. இங்குள்ள லக்சா தேவி மற்றும் கணேஷ் கோவில்கள் அவற்றின் கட்டிடக்கலைநயத்திற்காக மிகவும் புகழ் பெற்றவையாகும்.
4 கிமீ மலையேற்ற பயண தூரத்தில் உள்ள சாவ்ராசி கோவிலும் பார்வையாளர்களை கவரும் மற்றொரு இடமாகும். மணிமகேஷ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், 35 கிமீ மேல் நோக்கிய மலையேற்ற பயணத்திற்குப் பிறகு அங்கு அமைந்துள்ள மணிமகேஷ் புனித ஏரியில் குளிப்பது அவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்.
மலையேற்றம் போன்ற வீர விளையாட்டுகளை விரும்புபவர்களுக்கு பார்மர் ஒரு அற்புதமான களமாக இருக்கும், இதன் மண்டல மையம் மணலியில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த பகுதிக்கு வருகை புரிவது நல்ல அனுபவமாக இருக்கும்.