தின்ஜோய் சத்ரா, வைஷ்ணவப் பிரிவினரின் அஸ்ஸாமிய சமூகக்கலாச்சார ஸ்தாபனமாகும். இது திப்ருகாரின் சௌபா நகரியத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வைஷ்ணவத்தை பின்பற்றும் பக்தர்கள் வழக்கமாக வந்து செல்லும் இந்த சத்ரா, திரு கோபால் அட்தேவ் அவர்களின் பன்னிரெண்டு முக்கிய சீடர்களுள் ஒருவரான திரு அனிருத்தா தேவ் அவர்களால் நிறுவப்பட்டதாகும்.
இந்த சாத்ரா முதலில் வடக்கு லக்ஷ்மிபூருக்கு அருகில் உள்ள பிஸ்னுபலிகாக்னுஷி என்ற கிராமத்தில் தான் அமைந்திருந்தது. மோயாமோரியா புரட்சியின் போது, தின்ஜோய் சத்ரா பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.
அப்போது இதன் தலைவராக இருந்தவரின் மறைவைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு, இதன் தலைமை ஆசனம் காலியாகவே இருந்துள்ளது. அதற்குப் பின்னான பர்மா படையெடுப்பும் இந்த சாத்ராவின் நிம்மதியைக் குலைத்துள்ளது.
தின்ஜோய் சத்ரா, அதன் வழிபாட்டு முறைகள், மற்றும் வைஷ்ண விதிகளோடு கலாச்சாரத்தையும் கடைபிடிக்க வலியுறுத்திக் காட்டும் கெடுபிடி ஆகியவற்றுக்கு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த சத்ராவிற்கு வருகை தரும் எவரும், தங்களின் ஆன்மீக பக்கம் வெளிக்கொணரப்படுவதை எளிதாக உணரலாம். இன்று, தின்ஜோய் சத்ரா, மதம் சார்ந்த ஒரு ஸ்தாபனம் என்பதையும் தாண்டி வரலாறு மற்றும் கலாச்சார ரீதியில் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாகத் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications