சத்ராக்கள் பல நூற்றாண்டுகளாக, அஸ்ஸாமிய சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்து வரும் சமூக மற்றும் மதம் சார்ந்த ஸ்தாபனங்களாகும்.
திப்ருகாரின் தேஹிங் சத்ரா, பல வருடங்களுக்கு முன் இங்கு காணப்பட்ட வளமிக்க வரலாறு மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவு ஆகியவற்றின் மௌன சாட்சியாக கம்பீரமாக நிற்கின்றது. ஆன்மீகத் தலமாக விளங்கிய தேஹிங் சத்ராவிற்கு அஹோம் மன்னர்கள் அனைத்து வகைகளிலும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்த ஸ்தாபனத்திற்கு தங்கு தடையில்லா அர்ப்பணிப்பு உணர்வோடு ஆதரவு அளித்தவர்களின் பெயர் பட்டியலில், அஹோம் மன்னர்களான ராஜேஷ்வர் சிங்கா மற்றும் கௌரிநாத் சிங்கா ஆகியோரின் பெயர்கள் முன் வரிசையில் இடம்பெற்றுள்ளன.
பிரபலமான மோயாமோரியா புரட்சியின் (1769 - 1806) போது, இந்த அஹோம் மன்னர்கள் தேஹிங் சத்ராவிற்கு பெருமளவில் ஆதரவு அளித்திருக்கின்றனர்.
தேஹிங் சத்ரா தற்போது சிதிலமடைந்து காணப்பட்டாலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதன் பழங்கால மாட்சிமையை நன்கு உணரலாம். தேஹிங் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த சத்ரா, இந்த நதியின் பெயரிலிருந்தே இவ்வாறு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இயற்கையோடு ஒன்றி அழகு ததும்ப வீற்றிருக்கும் இதன் அமைப்பே இதனை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகத் திகழச் செய்கிறது.