கோலி ஆய் தான், அஸ்ஸாம் மக்களிடையே மிகவும் புனிதமானதாக மதிக்கப்படுகிறது. இவ்வளாகத்தில் கோயிலையோ அல்லது வேறு சிலைகளையோ காண முடியாவிட்டாலும் இது திப்ருகார் வரும் சுற்றுலாப் பயணிகள் அநேகம் பேர் வந்து போகும் ஒரு ஸ்தலமாக விளங்குகிறது. கோலி ஆய் தான், அஹோம் ராஜ்யத்தின் பழம்பெரும் ‘தான்களுள்” ஒன்றாகக் கருதப்படுகிறது.
கோலி ஆய் தான், அதன் தலைமை குருக்களான திபாரு சத்ராவின் மகளாகிய கோலி ஆய்க்கு அர்ப்பணம் செய்யப்பட்டதாகும். திபாரு சத்ராவுக்கு ஆண் வாரிசுகள் இல்லாததால் மரபுடைமையை முன்னெடுத்துச் செல்ல ஆளில்லை.
அதனால், கோலி ஆய் தன் பக்தி மற்றும் அர்ப்பணிப்பினால் சத்ராவின் ஆவியை உயிரோடு வைத்திருந்திருக்கிறார். கோலி ஆய், தெய்வீக சக்திகளைக் கொண்டிருந்ததாக இங்கு ஒரு நம்பிக்கை உலவி வருகிறது.
இந்த சக்திகளைக் கொண்டிருந்ததனாலேயே, அவர் இந்த இடத்திலிருந்து ஒரு திருநாளில் மாயமாய் மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பெருந்திரளான மக்கள் இந்த தானுக்கு வருகை தந்து, ஆய்க்கு தங்கள் மரியாதைகளை செலுத்திச் செல்கின்றனர். கோலி ஆய் தான், அஸ்ஸாமின் ஆன்மீக வரலாற்றிலும் ஆழ்ந்த ஆளுமையைக் கொண்டுள்ளது.