துத்வா தேசிய பூங்கா, இந்திய நேபாள எல்லைக்கு அருகில் இருக்கும் டெராய் பெல்ட் பகுதியில் அமைந்திருக்கிறது. 1958ல் வனவிலங்கு சரணாலயமாக நிறுவப்பட்ட இந்த பூங்கா, 1977ல் தேசிய பூங்காவாக மாறியது.
தற்போது இந்த பூங்கா கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் கட்டர்நிகாத் வனவிலங்கு சரணாலயம் ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்தப் பூங்காவின் பெரும்பகுதி சமதளங்களாக உள்ளன. அதே நேரத்தில் இந்த பூங்காவில் பல ஏரிகள், குட்டைகள் மற்றும் நீரோடைகள் போன்றவற்றைக் காணலாம்.
துத்வா பூங்காவில் ஸ்வாம்ப் மான் சிறுத்தை, மீன் பிடிக்கும் பூனை, ரேட்டில், சிவெட், நரி, ஹாக் மான் மற்றும் குறைக்கும் மான்கள் போன்ற விலங்குகள் ஏறளமாக உள்ளன.
அதுபோல் இந்த பூங்கா பலவகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்களுக்கு ஒரு சொர்க்க பூமியாகவும் விளங்குகிறது. இந்த பூங்காவில் இருக்கும் பேங்க் தால் என்ற பகுதியிலிருந்து இந்த பூங்காவில் வசிக்கும் இக்ரெட்டுகள், வாத்துகள், கோர்மொராண்டுகள், ஹெரான், நாரைகள் மற்றும் ஸ்வான்கள் போன்ற பறவைகளைப் பார்த்து ரசிக்கலாம்.
மேலும் முதலைகள் மற்றும் பலவகையான பாம்புகளையும் இந்த பூங்காவில் பார்க்க முடியும். அதோடு இந்த பூங்கா பலவகையான விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது.



Click it and Unblock the Notifications