உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இயற்கை அழகு நிறைந்த பிலிபிட் நகரம் அடர்ந்த வனப்பகுதியாகும். சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தாலும் நேபாளத்துடன் பகிரப்படும் 54கிமீ தூர எல்லையால் பாதுகாப்புப் பிரச்சினைகளும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியின் கலாச்சார, பாரம்பரிய விசயங்களை பறைசாற்றும் வண்ணம் இங்கு ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. மேலும் பல யாத்ரீக ஸ்தலங்களும் இயற்கை சூழலில் அமைந்துள்ளன.
பிலிபிட் அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்
பிலிபிட் புலிகள் சரணாலயத்தில் கம்பீரமான புலிகளைக் காணலாம். அதுமட்டுமல்லாது கோமட் தால், தேவா-காக்ரா சங்கம் மற்றும் ராஜா வேணு கா திலா ஆகிய இயற்கை தளங்களும் உள்ளன. மாஹோஃப் வனப்பகுதியில் இருக்கும் சுக்கா கடற்கரையில் இருந்து சூரியமறைவைப் பார்ப்பது மதிமயக்கும் அழகிய அனுபவமாகும்.
கெளரி சங்கர் கோவில் என்ற 450ஆண்டு பழமையான கோவில் பிலிபிட்டில் அமைந்துள்ளது. சாத்தவி பட்ஷாஹி குருத்வாரா, தர்ஹா ஹஜ்ரத் ஷா, ஷேர் மியான் கீ, ஜம்மா மஸ்ஜித், மெதடிஸ்ட் தேவாலயம், அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஜைஷாந்த்ரி கோவில் ஆகியவையும் இங்கு உள்ளன.
15ஆம் நூற்றாண்டு வரை பழமையான வரலாறு கொண்ட் பழைட பிலிபிட் மக்களால் வண்ணமயமாக நிரம்பி வழிகிறது.