இமலயமலை அடிவாரத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்தியாவின் 41 புலிகள் சரணாலயங்களில் ஒன்றான புலிபிட் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. புலிபிட் பகுதியில் 800சதுர கிமீ மேல் வனப்பகுதி உள்ளது.
36 புலிகள் உள்ள இச்சரணாலயம் புலிகள் உண்டு வாழ ஏற்ற இடமாக உள்ளது. ஷாரதா நதி மற்றும் காக்ர நதியால் இப்பகுதி சூழப்பட்டுள்ளது. வங்காள புலிகள், மான்கள், வங்காள ஃப்ளோரிகான்கள் மற்றும் இந்திய வேங்கைகள் என பலவகையான வனவிலங்குகள் இங்கு உள்ளன.
புலிகள் சரணாலயமாக மட்டுமல்லாது தெராய்-துவார் சவான்னா மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற புல்வெளிகளும் அமைந்துள்ளன. மேலும் 125வன விலங்குகள், 550 பறவை இனங்கள் மற்றும் 2100 பூச்செடி வகைகளும் இங்கு உள்ளன.