துவாரகா நகரத்தின் பிரதான கோயிலான இந்த துவாரகதீஷ் கோயில் ஜகத் மந்திர் (உலக கோயில்) என்றும் சிறப்புப்பெயரை பெற்றுள்ளது. 2500 வருடங்களுக்கு முன்னர் இந்த கோயிலின் ஆதி அமைப்பு ஷீ கிருஷ்ணரின் கொள்ளுப்பேரனான வஜ்ரநபி என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கிருஷ்ணரின் சொந்த ராஜ்ஜியமான துவாரகாபுரி மஹாபாரதப்போர் முடிவுக்குப்பின்னர் நீரில் மூழ்கியதாகவும் அதற்கடுத்த காலகட்டத்தில் இந்த கோயில் எழுப்பப்பட்டதாகவும் ஐதீக நம்பிக்கைகள் நிலவிவருகின்றன.
தற்போது ஜகத் மந்திர் கோயில் வளாகத்தில் காணப்படும் கலாபூர்வமான கட்டமைப்புகள் 16ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. 43 மீ உயரமுடைய இந்த கோயில் கோபுரமும் அதில் சந்திர சூரிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடியும் 10 கி.மீ தூரத்திலிருந்தே நன்றாக தெரிகின்றன.
மிருதுவான சுண்ணாம்புக்கல் பாறைகளால் இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சொர்க்க வாசல் எனும் நுழைவாயில் மற்றும் மோட்ச வாசல் எனும் வெளியேறும் வழி ஆகிய பிரத்யேக வாசல் அமைப்புகளை இது கொண்டிருக்கிறது.
காலை 7மணி முதல் மாலை 9 .30 வரை இந்த கோயில் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது. மதியம் 12.30 முதல் 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.