துவாரகா நகரத்தில், அரபிக்கடல் கரையில் இந்த லைட் ஹவுஸ் வீற்றிருக்கிறது. இதன் உச்சியிலிருந்து துவாரகா நகரத்தின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
தினமும் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை இந்த கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக விளங்கும் இந்த கலங்கரை விளக்கம் நகரச்சந்தடியிலிருந்து விலகியதாக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.